The post “சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்” – இயக்குநர் லிங்குசாமியின் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குநர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம். அது போன்ற ஒரு வெற்றியை இந்தப் படம் நிச்சயம் பெறும்.
நடிகர் விமல் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மஞ்சப்பை’ போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளவர். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டுவிட்டது.
இப்போது சின்னப் படங்கள் என்று சொல்லப்படக் கூடிய ‘லவ் டுடே’ போன்றவை ரிலீசுக்குப் பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
The post “சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்” – இயக்குநர் லிங்குசாமியின் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.
‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.
The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post ‘தி வாரியர்’ படத்தின் மாஸ் டிரெய்லர் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>இந்த இரு மொழி திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்துரி தனது தயாரிப்பு நிறுவனமான Srinivasa Silver Screen சார்பில் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் தனது திறமையை நிரூபித்த ஆதி பினுசெட்டி இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் அக்ஷரா கவுடா, நதியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் விஜய் மாஸ்டர் ஆக்சன் பணிகளை செய்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.
சமீப நாட்களில் அசத்தலான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு இந்தப் படம் பற்றி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர் படக் குழுவினர். ஏற்கனவே வெளியான படத்தின் சார்ட் பஸ்டர் பாடல்கள் யூ டியூப்பில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், அது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் குழுவினர் நேற்று தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அசர வைக்கும் ஆக்சன் தெறிக்கும் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
அனந்தபூரில் நடந்த இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் ‘தி வாரியர்’ படத்தின் மாஸ் ட்ரெய்லரை, மாஸ் டைரக்டர் போயபதி ஸ்ரீனு வெளியிட படக் குழுவினர் கொண்டாடினர். தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த டிரெய்லரில், ராம் பொத்தினேனி மற்றும் ஆதி பினுஷெட்டி ஆகியோர் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கி, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.
ராம் பொத்தினேனியின் பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் ஆதியின் முரட்டுத்தனமான மற்றும் இரக்கமற்ற தோற்றம் ஆகியவை டிரெயிலரில் ஒரு தீப்புயலைத் தூண்டியிருக்கிறது.
மீதமுள்ள விவரங்களை அறிய நீங்கள் தி வாரியர் டிரெய்லரை பார்க்க வேண்டும்.
இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
The post ‘தி வாரியர்’ படத்தின் மாஸ் டிரெய்லர் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘தி வாரியர்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாம்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் பலவிதமான காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
Srinivasaa Silver Screen பேனர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சித்தூரி இந்தப் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வெளியிடவுள்ளார். தமிழின் பிரபலமான இயக்குநரான லிங்குசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், நாயகன் ராம் பொத்தினேனிக்கு கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொத்தினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார்.
தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது படத்தின் நாயகனான ராம் பொத்தினேனியின் திரை வாழ்க்கையில் இதுவொரு உச்சமான சாதனையாகும்.
இந்த ‘தி வாரியர்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும், இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘சீடிமார்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘தி வாரியர்’ படமும் மிகப் பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
The post ‘தி வாரியர்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாம்..! appeared first on Touring Talkies.
]]>