The post சூர்யா-ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும்விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ‘ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்’ நிறுவன தலைவர் சந்தோஷ் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதால் இது குறித்து சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ‘ஜெய் பீம்’ படத்தில் சில காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக இருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியும், இன்ன பிற வன்னியர் சங்கங்களும் எதிர்ப்புகளைக் காட்டியவுடன் அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதோடு இது குறித்து வருத்தம் தெரிவித்து நடிகர் சூர்யாவும், இயக்குநரும் அறிக்கையும் வெளியிட்டார்கள். இதோடு இந்தப் பிரச்சினை முடிந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த அமைப்பு மட்டும் விடாமல் நீதிமன்றம்வரையிலும் சென்றுள்ளது.
The post சூர்யா-ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் – சூர்யா & ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Touring Talkies.
]]>நடிகர் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுபடுத்தும்விதமாக காட்சிகள் இருப்பதாக பா.ம.க. தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும், காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ‘ஜெய் பீம்’ படத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய் பீம் பட விவகாரத்தில் மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று அப்படத்தின் இயக்குநர் ஞானவேல் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் கோர்ட்டில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீதும் வழக்கு தொடரபட்டது.
அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிதம்பரம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் – சூர்யா & ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Touring Talkies.
]]>