Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் து.பா.சரவணன் – Touring Talkies https://touringtalkies.co Wed, 16 Jun 2021 06:53:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் து.பா.சரவணன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஷாலின் 31-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது https://touringtalkies.co/vishal-31st-movie-starts-in-hyderabad/ Wed, 16 Jun 2021 06:52:25 +0000 https://touringtalkies.co/?p=15563 நடிகர் விஷால் நடிக்கும் 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் துவங்கியது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் ‘தேவி-2’ படத்தில் நடித்த அனுபவம் கொண்டவர். படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.பி. ஸ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை […]

The post விஷாலின் 31-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் நடிக்கும் 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் துவங்கியது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் ‘தேவி-2’ படத்தில் நடித்த அனுபவம் கொண்டவர்.

படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.பி. ஸ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார். ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கி திரையுலகத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குநர் து.பா.சரவணன்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதைதான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில கிராமத்துக் கதையுடன், ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன்-2 துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புவரையிலும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் படக் குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியிருந்தார்கள்.

இப்போது மீண்டும் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார்கள். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இதற்கான படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த முறை படப்பிடிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதிவரையிலும் நடைபெற்று முடியும் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

படப்பிடிப்பின் முதல் நாளில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

The post விஷாலின் 31-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>