The post ‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்த படம் ‘மாமனிதன்’. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு அவரும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
இந்தப் படம் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய பாராட்டுக்களை படக் குழுவினருக்குப் பெற்றுக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து ‘ஆஹா’ ஓடிடி தளம் ‘மாமனிதன்’ படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. ‘மாமனிதன்’ படம் ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ‘ஆஹா’ ஓடிடி குழு படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக் கொண்டாடியது.
தொடர்ந்து பல நாடுகளில் நடத்தப்பட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட ‘மாமனிதன்’ பல பல விருதுகளை தொடர்ச்சியாக வென்று வருகிறது.
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற ‘வேர்ல்டு பிலிம் கார்னிவல்’ எனப்படும் சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் கலந்து கொண்டது.
இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது, சிறந்த குடும்ப படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதையிற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, என்று 4 விருதுகளை இத்திரைப்படம் பெற்று சாதனை படைத்துள்ளது.
The post ‘மாமனிதன்’ படத்திற்கு சிங்கப்பூர் பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது appeared first on Touring Talkies.
]]>The post ‘இடி முழக்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 13-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், சரண்யா பொன்வண்ணன், M.S.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று’ மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அழகான வாழ்வியலை கண் முன்னே கொண்டு வருவதில் வல்லவரான இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 13-ம் தேதி வெளியாகும் என்ற இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
The post ‘இடி முழக்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 13-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post “விரைவில் ரஜினி இடத்தை விஜய் சேதுபதி பிடிப்பார்..” – ஆர்.கே.சுரேஷின் ஆரூடம்..! appeared first on Touring Talkies.
]]>இந்த விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகனான விஜய் சேதுபதி, “யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். அவருடைய இசையில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி பேசும்போது, “தற்போது நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்து காத்திருக்கிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும்விதமாக இப்படம், இளையராஜா பிறந்த ஊரான தேனி, பண்ணைப்புரத்தில் படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,”இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்களும், சந்தேகங்களும் இருந்தன. ஆர்.கே.சுரேஷ் படத்தைப் பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறியதாக இயக்குநர் சீனு ராமசாமி என்னிடம் தெரிவித்தார். குழப்பமான ஒரு சூழ்நிலையில் இருந்தபோது, இது ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது.
நானும் சீனு ராமசாமியும் ஒன்றாக பல முறை பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு அருமையான இயக்குநர். நான் விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் டேட் இல்லை என்று கூறினார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாலுமகேந்திராவுக்குப் பிறகு மனித உணர்வுகளை அப்படியே படம் பிடிக்கும் சம கால இயக்குநர்களில் சீனு ராமசாமி முக்கியமானவர். எங்கள் இருவரின் நட்புதான் ‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.
மக்கள் மனதில் ரஜினிகாந்த் மட்டுமே அடைந்துள்ள இடத்தை விஜய் சேதுபதி கூடிய விரைவில் பிடிப்பார். சீனு ராமசாமி எப்போதும் விஜய் சேதுபதியிடம் இருந்து சிறந்ததையே பெறுவார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.
விழா இறுதியில் படத்தின் இசையை படக் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளியிட்டனர்.
The post “விரைவில் ரஜினி இடத்தை விஜய் சேதுபதி பிடிப்பார்..” – ஆர்.கே.சுரேஷின் ஆரூடம்..! appeared first on Touring Talkies.
]]>The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.
]]>தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.
இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று காலை டிவீட்டரில் ஒரு அவசரச் செய்தியொன்றை பகிர்ந்தார் சீனு ராமசாமி.
அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்துப் பேசுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ பிரச்சனையில் எல்லோரையும் போலவே நானும் தம்பி விஜய் சேதுபதியிடம் ‘அதில் நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.
இதற்கடுத்து நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவன் என்று சித்தரித்து எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.
எனக்கும், தம்பி விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனைக் கூர்மையாக்கி எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
எனக்கு அரசியல் பற்றிய சினிமாக்களை எடுக்கத் தெரியும். ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் அரசியல் தெரியாது. தம்பி விஜய் சேதுபதியின் நலன் கருதியே அவரை அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனாலும் எனக்கு மிரட்டல்களும், ஆபாச அர்ச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.
இது பற்றி தம்பி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன். விஜய் சேதுபதியின் ரசிகர்களும் என்னுடைய தம்பிகள்தான். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ‘நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது’ என்று விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.
ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப் போகிறேன்..” என்று கூறினார் சீனு ராமசாமி.
The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
நடிகர் விஜய் சேதுபதிதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அனைத்து வகைப் படங்களிலும் நடிப்பதற்கு தகுதியான ஒரே ஆள் என்பது சினிமா துறையினரின் எண்ணம்.
அந்த வகையில் அவருடைய பல திரைப்படங்கள் கலவையான கதைக் களனில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கும் பெருமையளிக்கும்விதமான கதாபாத்திரங்கள்தான் கிடைத்து வந்தன.
இந்த நேரத்தில்தான் தமிழ் உணர்வாளர்களை வருத்தப்பட வைக்கும் ஒரு செய்தி வந்தது. பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்பதுதான் அந்தச் செய்தி.
முத்தையா முரளிதரன் ஒரு தமிழர்தான் என்றாலும் அவர் ஈழத் தமிழர்களுக்காக எந்தக் குரலும் கொடுக்காதவர் என்பதோடு எல்லா காலக்கட்டங்களிலும் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை நின்றவர். இதனால் தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஈழ இன உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விஜய் சேதுபதிக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
அப்போதைக்கு அந்தப் படம் பற்றி எந்த முடிவும் இதுவரையிலும் எடு்க்கவில்லை என்று மட்டுமே சொல்லி பிரச்சினையை ஊறப் போட்டார் விஜய் சேதுபதி. ஆனால், இப்போது சில நாட்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி, முத்தையா கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாக ஒரு செய்தி வெளியில் பரவியது.
இதற்கு இதுவரையிலும் விஜய் சேதுபதி மறுப்பு வெளியிடாததால் செய்தி உண்மைதான் என்று தெரிந்து தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் விஜய் சேதுபதி மீது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இதேபோல் விஜய் சேதுபதியின் குருநாதரும், அவரை ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் அறிமுகப்படுத்தியவருமான இயக்குநர் சீனு ராமசாமியும் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள்
விஜய் சேதுபதி நடிக்கும்
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம்
அதற்கு சான்று.
ஈழத் தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா…
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?”
என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>