The post பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..! appeared first on Touring Talkies.
]]>சிறைக்கு அனுப்புவதற்காக 3 போட்டியாளர்களைத் தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறியதற்காக நடந்த பிரச்சினையில் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவரிடையே எழுந்த வாய்த் தகராறு கடைசியாக டாஸ்மாக் கடை சண்டையில் வந்து முடிந்துள்ளது.
பெண் போட்டியாளர் என்றும் பாராமல் ஆயிஷாவை போடி, வாடி என்றழைத்தார் அசீம். இதைத் தட்டிக் கேட்ட விக்ரமனையும், வாடா போடா என்று அழைத்து டென்ஷனை கூட்டினார் அசீம்.
பதிலுக்கு ஆயிஷாவும் தனது செருப்பைக் கழட்டிக் காட்டி “அடிச்சிருவேன்” என்று அசீமை மிரட்டினார். “அடிச்சுப் பாருடி.. வாடி” என்று அசீமும் கோபத்துடன் கத்த.. நிகழ்ச்சி ஏக ரகளையானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையிலும் இல்லாத வகையில் நடந்த ஒரு அநாகரிகமான நிகழ்ச்சி இதுதான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை பிக்பாஸூக்கு வரும் கமல்ஹாசன் அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்ற பிக்பாஸ் சீஸனில் பேருந்தில் செல்லும்போது ஜாலியாக நடந்த ஒரு நிகழ்ச்சியை கூறிய நடிகர் சரவணன் பெண்களை இழிவு செய்து விட்டதாக உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியே தள்ளிய பிக்பாஸ், இப்போது பெண்களிடம் அவமரியாதையாக “வாடி, போடி” என்று பேசிய அசீம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
The post பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>பெங்களூரைச் சேர்ந்த நடிகை பிரியாமணி 2003-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீரின் இயக்கத்தில் உருவான ‘பருத்தி வீரன்’ படத்தில் ‘முத்தழகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார் பிரியாமணி.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியாமணி 2017-ம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பிரபமான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். கடந்த நான்கு வருடங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கழிந்த பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“நானும், முஸ்தபாவும் எங்களது இரு குழந்தைகளின் நலன் கருதி இதுவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அதனால், முஸ்தபாவின் இரண்டாவது திருமணம் செல்லாது” என ஆயிஷா கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முஸ்தபா, “2010-ம் ஆண்டிலேயே நானும், ஆயிஷாவும் பிரிந்துவிட்டோம். 2013-ம் ஆண்டில் சட்டப்படி விவகாரத்தும் பெற்றோம். அதன் பின்புதான் நான் பிரியாமணியை திருமணம் செய்தேன். பிரியாமணியுடன் திருமணம் முடிந்து கடந்த 4 ஆண்டுகளாக என் மகள்களுக்கு நான் தர வேண்டிய ஜீவனாம்சத் தொகையை சரியாகக் கொடுத்து வருகிறேன். நான்காண்டுகள் சும்மாயிருந்துவிட்டு இப்போது தேவையில்லாமல் ஆயிஷா பிரச்சனையை கிளப்புகிறார்..” என கூறியுள்ளார்.
ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும் ஆயிஷா, “பிரியாமணியை திருமணம் செய்கையில் தானொரு பேச்சிலர் என்றுதான் முஸ்தபா நீதிமன்றத்தில் கூறினார். குழந்தைகள் நலனுக்காக பிரச்சனைகள் தீரும் என இதுவரை காத்திருந்தேன். இனி முஸ்தபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என கூறியுள்ளார்.
ஆயிஷாவின் இந்த திடீர் அதிரடி பேட்டியால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை பிரியாமணி இதுவரையிலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
The post நடிகை பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>