The post ‘பார்டர்’ படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்த ‘பார்டர்’ படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.
எழுத்து, இயக்கம் – அறிவழகன், சாம் C.S.(இசை), B.ராஜசேகர்(ஒளிப்பதிவு), சாபு ஜோசப்(படத் தொகுப்பு), ஷக்தி வெங்கட்ராஜ்.M(கலை இயக்கம்), ஹீரா அறிவழகன்(ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R.(நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ்(கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), & Sync Cinema(ஒலி வடிவமைப்பு).
இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் பட வெளியீடு குறித்துப் பேசுகையில், “தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்” படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது 11:11 Productions எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது .
தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்தப் படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.
The post ‘பார்டர்’ படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தினை AVM தயாரிப்பு நிறுவனம் சோனி லிவ் தளத்திற்காகத் தயாரித்துள்ளது.
மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இத்தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
“ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை, மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை பைரசி சிக்கலில் இருந்து நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறான்..?” என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் தளம்.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட இந்த தொடர், ‘ருத்ரா’ எனும் ஒரு காவல் அதிகாரியின் பயனம் மூலமாக திரைக்கதையை விவரிக்கிறது. இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார்.
இந்தத் தொடரில் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளனர்.
உலகளவில் கலையுலகில் சட்ட விரோதமான செய்தி திருட்டு என்பது மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
முதல்முறையாக ஒரு மிக பெரிய ஆராய்ச்சியையும், தேடுதல் வேட்டையையும் நடத்தி, உண்மையை அறிந்து கொண்டு, இந்த சதி வலையில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்விதமாக இத்தொடரில் வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் தி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏவி.எம்.புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் பேசும்போது, “இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டியுள்ளனர்.
சோனி லிவ் நிறுவனத்தினை எங்களது பங்குதாரராக கொண்டது எங்களது பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. மேலும், தொலை நோக்கு சிந்தனையுள்ள இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரும் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டுமில்லாமல், மக்களுடன் ஒரு உணர்வுபூர்வமான ஒரு பந்தத்தினையும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.” என்றார்.
படத்தின் இயக்குநரான அறிவழகன் பேசும்போது, “பைரசி’, ‘ஹால் காபி’, ‘டோரன்ட் டவுன்லோட்’ போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் மற்றைய உலகிற்கு தெரியாது.
‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இந்த சுவாரஸ்மான திரில்லரில் நாயகன் அருண் விஜய் தனது ‘ருத்ரா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை பைரசி உலகத்தின் மர்மமான வாசல்களுக்கு அழைத்து செல்கிறார்..” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தத் தொடரின் ஒரு பகுதியாக நானும் இருந்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராகவே நான் இதனை பார்க்கிறேன்.
திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
செய்தி திருட்டு என்பது காலம்காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொடர், திரையுலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும்.
எனது கதாபாத்திரமான ‘ருத்ரா’ என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதுதான் கதை. எனவே, நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் காண்பதற்கு காத்திருக்கின்றேன்…” என்றார்.
The post பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர்..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் ராக்கர்ஸ் என்ற அந்த வெப் தொடர் சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கங்களை அம்பலப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும்.
அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஈரம் அறிவழகன் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். மனோஜ் குமார் கலைவாணன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இந்த தமிழ் ராக்கர்ஸ் தொடர், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது. சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இந்த வெப் தொடர் நடத்துகிறது.
கட்டுக் கடங்காத ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகரின் மிகப் பெரிய பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் களவாடப்பட்டு இணையத்தில் வெளியாகிறது. ருத்ரா இதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். இதுதான் இந்தத் தொடரின் கதையம்சமாகும்.
இத்தொடர் பற்றி இயக்குநர் அறிவழகன் பேசும்போது “பாரம்பரியமிக்க ஏவி.எம். புரொடக்சன்ஸ் மற்றும் சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சோனி லிவ் ஓடிடி தளம் பார்வையாளர்கள் விரும்பும் வகையில், சிறந்த உள்நாட்டு படைப்புகளை வெளியிட்டு வருகிறது, இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் காவல் துறை அதிகாரியான ருத்ராவின் கதை.
சைபர் க்ரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுது போக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் இந்த தொடர் வெளிப்படுத்தும். இந்த தொடரில் அருண் விஜய் நடித்தது பெருமையாக உள்ளது. சோனி லிவ் தளத்தில் விரைவில் இத்தொடர் வெளியாகவுள்ளது…” என்றார்.
ஏவி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருணா குகன் பேசும்போது, “இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும்,
ஏனெனில் எங்களின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியிருப்பது இந்தத் தொடரின் மூலம்தான். மேலும் இந்த தொடர் மூலம்தான் ஏவி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனம் முதல்முறையாக ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறது.
என் சகோதரியும், நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பாளருமான அபர்ணாவும் நானும் சைபர் க்ரைம், பைரஸி பொழுது போக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவும், அதைப் பற்றிய கதையை கூறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தோம்.
திறமை மிகுந்த இயக்குநர் அறிவழகனுடன் பணி புரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது. அருண் விஜய் சார் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப் பெரும் பலத்தை தந்ததுள்ளது.
சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தொடர்களை, ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளை அளித்து வரும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் எங்களது ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர் வெளியாவதை காண ஆவலோடு உள்ளோம்…” என்றார்.
The post எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘பார்டர்’ படத்துக்கு வந்த தலைப்பு சிக்கல் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் ‘பார்டர்‘ படத்தை வெளியிட தடை கேட்டு டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் “பார்டர்’ என்ற தலைப்பில் நான் படம் ஒன்றை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தின் தலைப்பை ஏற்கனவே தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
ஆனால் அருண் விஜய்யின் நடிப்பில் தற்போது ’பார்டர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த படம் வெளியானால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே அருண் விஜய்யின் ‘பார்டர்’ படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பார்டர்’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
இதனால் அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
The post ‘பார்டர்’ படத்துக்கு வந்த தலைப்பு சிக்கல் appeared first on Touring Talkies.
]]>