The post ‘மெளன குரு’ சாந்தகுமார் இயக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>‘மெளன குரு’, ‘மகா முனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.
இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி), ஒளிப்பதிவு – சிவா G.R.N., கலை இயக்கம் – சிவராஜ் சாமரன், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், படத் தொகுப்பு – V.J.சபு ஜோசப், இசை – தமன், பாடல்கள் – யுகபாரதி, புகைப்படங்கள் – M.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு – மீனு சித்ரா கனி, உடைகள் – P.செல்வம், ஒப்பனை – வினோத், இணை இயக்கம் – சிவ பிரகாஷ் & கிருஷ்ணமூர்த்தி, புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – C.சரவணன், தயாரிப்பு மேலாளர் – தேனி தமிழ், நிர்வாக தயாரிப்பாளர் – S.பிரேம்.
ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான ‘மகாமுனி’ மற்றும் ‘மெளன குரு’.
இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.
தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன்.
‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘அந்தகாரம்’ ஆகிய படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தக் கட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் தொடங்கியது.
The post ‘மெளன குரு’ சாந்தகுமார் இயக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது appeared first on Touring Talkies.
]]>தற்போது வசந்தபாலன் தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ‘ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
பள்ளிக் காலத்தில் தன்னுடன் படித்த மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகத் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்புதான் இன்று காலை சென்னையில் துவங்கியது. இந்தப் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும் சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
‘வெயில்’, ‘ஜெயில்’ ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசைக்காக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம்.ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார். நிர்வாக தயாரிப்பாளர்காக பிரபாகரும், லைன் புரொட்யூசராக நாகராஜ் ராக்கெப்பனும் பணியாற்றுகிறார்கள்.
“தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும்…” என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
The post இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது appeared first on Touring Talkies.
]]>