The post ‘அம்மா’ சங்க விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்ததன் மர்மம்தான் என்ன..? appeared first on Touring Talkies.
]]>மலையாள திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் இணைந்து ‘அம்மா’(AMMA-Association of Malayalam Movie Artistes) என்ற சங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது 27 வருடங்களுக்கு முன்பு உருவானதாகும்.
இந்தச் சங்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிகை மஞ்சு வாரியர் உறுப்பினர் என்றாலும் அவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்ததில் இருந்து இந்த சங்கம் நடத்திய எந்தவொரு விழாவுக்கும் வந்ததே இல்லையாம். ஏன் பொதுக் குழுவுக்குக்கூட வந்ததில்லை என்கிறார்கள்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘அம்மா’ சங்கத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மஞ்சு வாரியர் கலந்து கொண்டு அந்த முகாமைத் துவக்கி வைத்திருக்கிறார்.
“வருடா வருடம் நடைபெறும் பொதுக் குழுவுக்குக்கூட வராதவர் இந்த நிகழ்ச்சிக்கு எப்படி வந்தார்..?” என்று மலையாள நடிகர், நடிகைகள் அனைவரும் கிசுகிசுத்து வருகிறார்கள்.
மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸை 2014-ம் ஆண்டு வெளியான ‘How old are you’ படம் மூலமாகத் துவக்கி அதன் பின்பு இப்போதுவரையிலும் 21 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த 7 ஆண்டுகளில்கூட ஒரு முறைகூட அம்மா சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அவர் வந்ததேயில்லை. வராததற்குக் காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட அவருடைய முன்னாள் கணவரான திலீப், அம்மா சங்கத்தில் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்ததுதான். கூட்டத்திற்குப் போனால் அவரைப் பார்க்க வேண்டி வருமே என்று தவிர்த்துவிட்டார்.
ஆனால், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய திலீப், அம்மா சங்கத்தில் இருந்து தானாகவே விலகிவிட்டார். இந்தச் சர்ச்சையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையும், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் இருவரும்கூட அம்மா சங்கத்தில் இருந்து இப்போது விலகிவிட்டார்கள்.
இந்த மூன்று நடிகைகளும்கூட மஞ்சு வாரியருக்கு மிக நெருக்கமானவர்கள்தான். மஞ்சுவாரியர் முன்னின்று துவக்கிய ‘Women In Cinema Collective’ என்ற அமைப்பிலும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் ‘அம்மா’ சங்கத்தின் மீது கூறிய குற்றச்சாட்டு, நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை ‘அம்மா’ காப்பாற்ற முனைகிறது என்றுதான். ஆனால் இந்த நடிகைகளுக்கு உரிய பதில் கிடைக்காததால், அவர்கள் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் முக்கிய ஆதாரப் புள்ளியான மஞ்சு வாரியர் மட்டும் இன்னமும் இந்தச் சங்கத்தில் இருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற இரண்டு முறை ‘அம்மா’ சங்கத்திற்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில்கூட மஞ்சு வாரியர் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. தவிர்த்துவிட்டார். லேட்டஸ்ட்டாக ‘அம்மா’ சங்கத்தின் புதிய சொந்தக் கட்டிடத் துவக்க விழாவுக்கும் வரவில்லை.
இப்படி ‘அம்மா’ சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் ஒதுங்கியிருந்த மஞ்சு வாரியர் எப்படி இந்த முறை சங்க அலுவலகத்திற்கு வந்தார் என்று விசாரித்தபோது, “நிகழ்ச்சியில் அவர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலோ, மற்றைய நடிகர், நடிகர்களோ வரப் போவதில்லை. மஞ்சு மட்டுமே முக்கியப் புள்ளி…” என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
சங்கத்தின் செயலாளரான எடவலா பாபுவும், நடிகை நாராயணிக் குட்டியும், மற்றும் நடிகர் டினி டோம் உள்ளிட்ட வெகு சிலரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதனாலேயே மஞ்சு வாரியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்கிறார்கள் மலையாளத் திரையுலகத்தினர்.
எங்கே சென்றாலும், எந்த விழா என்றாலும் தான் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் என்று மஞ்சு வாரியர் பெரிதும் விரும்புவார். அதுதான் அவரை இந்த முறை அம்மா சங்கத்திற்குள் அழைத்து வந்திருக்கிறது என்று மலையாளப் பத்திரிகையாளர்களும் சொல்கிறார்கள்.
எப்படியோ.. அடுத்தாண்டு பொதுக் குழுவுக்கு மஞ்சு வாரியர் நிச்சயமாக வருவார் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரம் காவ்யா மாதவனும் அந்தப் பொதுக் குழுவுக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்..?
The post ‘அம்மா’ சங்க விழாவுக்கு மஞ்சு வாரியர் வந்ததன் மர்மம்தான் என்ன..? appeared first on Touring Talkies.
]]>