Thursday, April 11, 2024

“இசையில் ஞானி..  இங்கிதத்தில்…”: இளையராஜாவுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், இயக்குனருமான மனோ பாலா புதன்கிழமை (மே 3) காலமானார். அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இளையராஜா விடுத்த  இரங்கல் செய்தியில், “என்னிடம் மிகுந்த மதிப்பும் வைத்திருந்த நண்பர் மனோ பாலா இறந்த செய்தி அறிந்து துயருற்றேன்.

மனோ பாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராக தொடங்கி பின்னர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்தார். என்னை கோடம்பாக்கம் பாலத்தில் காரில் காண காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோ பாலாவும் ஒருவர்” எனத் தெரிவித்திருந்தார் .

இளையரஜாவின் இந்த வீடியோவை கண்ட பலரும், “ உங்களைப் பார்க்க கோடம்பாக்கம் மேம்பாலத்தில் காத்திருநதார் என இரங்கல் செய்தியில் தெரிவித்து இருப்பது தவறு.  இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது” என்று விமர்சித்து வருகின்றனர்.

நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா ‘இசையில் ஞானி.. ஆனால் இங்கித்த்தில்’ என்று குறிப்பிட்டு தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜிக்களையும் இளையராஜாவை விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News