Thursday, April 11, 2024

விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர். 

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் பெயர் காரணத்திற்கு வேறு ஒரு கதையை கூறுகிறார்கள்.

மீடியாக்களாகிய நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய்களை சொல்லவேண்டாம்” என கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஏ.சி.

 

- Advertisement -

Read more

Local News