நடிகை குஷ்பு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கனவு கன்னியாக வலம் வந்த அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இயக்குனர் சுந்தர் சி திருமணம் செய்து சினிமாவில் குணசித்திரம்,அரசியல் என்று வாழ்ந்துவருகிறார்.
அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் என் கணவருக்கு காதல் பண்ண வராது. ரொமான்ஸா காரில் போயிட்டு வரலாம்னு கூப்பிட்ட வரமாட்டார். கேண்டில் லைட் டின்னர் கூப்பிட்டாலும் முகமே தெரியாது யாரை பார்த்து பேசுறது என்பர்.
அவருடைய ஆசை தலையில் மல்லி பூ வைத்து பீச்சி போயிட்டு சுட்டல் சாப்பிட்டுகிட்டே பேசுறது. ஆனா அது முடியாது. கூட்டம் கூடும் அதனால் வீட்டில் இருக்கலாம் என்பார். ரொமான்ஸ் அவருக்கு வராது என்றார் குஷ்பு.