Friday, April 12, 2024

மீரா மிதுனுக்காகக் காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக் குழு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேய் வேடத்தில் நடிகை மீரா மிதுன் நடித்திருக்கும் படம் ‘பேய காணோம்’. மீரா மிதுன் தற்போது பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவருடைய வருகைக்காக இந்தப் படக் குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தை குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் மற்றும் R.சுருளிவேல் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் மீரா மிதுனுடன் இயக்குநர் தருண் கோபி,  கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம்,  முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – மிஸ்டர் கோளாறு, ஒளிப்பதிவு – ராஜ்.O.S,, கௌபாஸு, பிரகாஷ், படத் தொகுப்பு – A.K.நாகராஜ், தயாரிப்பு மேற்பார்வை – உசிலை சிவகுமார், மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  செல்வ அன்பரசன்.

வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம்… இன்னும் எதை எதை, எதையோ காணோம் என்று பலரும் தேடியிருப்பார்கள். ஆனால் உலகத்திலேயே முதன்முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள் சிலர். அந்தப் பேயை பேயை எதற்காக அவர்கள் தேடுகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது.

90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் நாயகி மீரா  மிதுன் திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் படம் அப்படியே நிற்கிறது.

மீரா மிதுனுக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் மீரா மிதுனால் வெளியில் வர முடியவில்லை. எப்போது அடுத்தக் கட்டமாக ஜாமீன் கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் மீராவுக்காகக் காத்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.

- Advertisement -

Read more

Local News