Friday, April 12, 2024

ராம் இயக்கத்தில் நிவின் பாலி-அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தனது திரையுலக பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராமின் இயக்கத்தில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார். கற்றது தமிழ்’, ‘பேரன்பு’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூரியும்  முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கின்றார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு  : A. ஜான்

தரமான படங்களை இயக்கி, தேசிய விருதினையும் பெற்றிருக்கும் இயக்குநர் ராமின் இந்தப் புதிய படைப்பும் நிச்சயமாக தேசிய விருதுகளைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News