Friday, April 12, 2024

பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்து வரும், திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.

இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத் தொகுப்பு- செல்வா R.K., கலை இயக்கம் –   உமேஷ் J.குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – சுபாஷ்கரன், எழுத்து, இயக்கம் – சுராஜ்.

இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ்’  படத்தின் அறிவிப்பு வெளியானபோதே படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வடிவேலுவின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.  

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவும், வைகைப் புயல்’ வடிவேலுவும் இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதற்காக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் நடன  மேதைகளில் ஒருவரான பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார்.

வில்லு’ படத்தைத் தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள்  லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான G.K.M.தமிழ்க்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை, டிரெயிலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News