Thursday, April 11, 2024

குத்துச்சண்டை போட்ட ரோஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ரோாஜா, தற்போது ஆந்திராவில் அமைச்சராக உள்ளார்.  இந்நிலையில்  விஜயவாடாவில்  நடந்த, தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவர், “சிறு வயதில் இருந்தே ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்தி, கற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு என்பது உடல் நலத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் அவசியம்” என்றார்.

பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் திடீரென ஒரு பஞ்ச் விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

- Advertisement -

Read more

Local News