Friday, April 12, 2024

மெல்பர்ன் திரைப்பட விருதுகளை சூர்யா-ஜோதிகா தம்பதிகள் பெற்றுக் கொண்டனர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த சூரரைப் போற்று’ படத்திற்குக் கிடைத்த மெல்பர்ன் சர்வதேச திரைப்பட விருதுகள் பத்திரமாக சூர்யாவிடம் வந்து சேர்ந்தது.

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த படம் ‘சூரரைப் போற்று’.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் வென்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த சூரரைப் போற்று’ திரை்பபடம் கலந்து கொண்டது. இந்த விழாவில் இந்தப் படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனால், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த விருதுகளை படத்தைத் தயாரித்த 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராஜேசகர் பாண்டியன் முன்னிலையில் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“இது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது” என நடிகர் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News