Friday, April 12, 2024

மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2000-ம் ஆண்டுகளில் தமிழ், மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக, இளைஞர்கள் மனதைக் கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும்  வகையில் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.  

ரன்’, ‘புதிய கீதை’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜோடி’, ‘சண்டக்கோழி’, ‘ஆயுத எழுத்து’, ‘கஸ்தூரி மான்’, ‘மெர்க்குரி பூக்கள்’, ‘திருமகன்’, ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’, ‘நேபாளி’, ‘மரியாதை’, ‘சிவப்பு மழை’, ‘இளைஞன்’, ‘மம்பட்டியான்’, ‘ஆதி நாராயணா’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘விஞ்ஞானி’ ஆகிய தமிழ்ப் படங்களில், தனது அழகு மற்றும் கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை கவர்த்திழுத்தவர் மீரா ஜாஸ்மின்.

விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருந்தார்.

பிக் பீரியடில் இருந்த நிலையிலேயே திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின் சில வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்க முடியாது என்பதால் மீண்டும் நடிப்புத் துறைக்குத் திரும்பியிருக்கிறார் மீரா.

மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும்  தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது.

ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள மீரா ஜாஸ்மின், பல காலமாக சோசியல் மீடியா பக்கம் வராமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) புதிதாக கணக்கு தொடங்கி இன்று ஒரே நாளில் 55 ஆயிரம் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

 மேலும் அவர் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கி வரும் ‘மகள்’படத்தில் தான் நடிப்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News