Thursday, April 11, 2024

“ஒரே நேரத்தில் ஆறு பெண்களை காதலித்த கமல்!”: நடிகை குட்டி பத்மினி பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை குட்டி பத்மினி, “நடிகர் கமல் ஒரே நேரத்தில் ஆறு நடிகைகளை காதலித்தார்” என தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்த வீடியோவல் அவர், “ஒரு காலத்தில், கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பல நடிகைகள் ரசிகர்களாக இருந்தார்கள்.  அப்போது, கமலின் நடிப்பை பார்த்து ஸ்ரீவித்யாவும் அவர் மீது காதல் வைத்திருந்தார். ஒருமுறை நான் கமலுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கமல், வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார். வாணிக்காக அவர் ஏர்போர்ட்டில் கிப்ட் வாங்கினார். அதேபோல இந்தி நடிகை ரேகாவுடனும் கமலின் பெயர் அடிபட்டு வந்தது. இதனால் காதல் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று ஸ்ரீவித்யாவிடம் நான் நேரடியாகவே சொன்னேன். ஆனால், நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. –

அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை எல்லாம் காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி ஆகிய இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நடிகைகள் இருந்தார்கள். அத்தனை நடிகைகளும் அவர் எப்படி சமாளித்தார் என்றே தெரியவில்லை. இதனால் தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்திருக்கும்” என குட்டி பத்மினி தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News