Thursday, April 11, 2024

‘மாவீரன்’ ரீ ஷூட் ஆகிறதா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மடோன்னே அஸ்வின் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் –  அதிதி ஷங்கர்  ஜோடியாக நடிக்கும் படம், “மாவீரன்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “படத்தில் இது வரை படமாக்கப்பட்ட காட்சிகள் எதுவும் திருப்தியாக இல்லை என்பதால் மீண்டும் முதலில் இருந்து படமாக்க உள்ளனர்” என  சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. 

இந்த நிலையில் பிரபல இயக்குனரான கேபிள் ஷங்கர் “இது வெறும் வதந்தி” என தெரிவித்து உள்ளார்.

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு  இப்படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசல்,  ஏற்பட்டதாகவும் ஆதலால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூட தகவல் வந்தது.

ஆனால் மழை காரணமாகத்தான் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இயக்குனர் மடோன்னே அஸ்வின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சிவகார்த்திகேயன் இதற்கு முன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் சரியாக ஓடாத காரணத்தினால் “மாவீரன்” திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக “மாவீரன்” திரைப்படம் குறித்து தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபத்துடனும் இருக்கிறார்களாம்.

- Advertisement -

Read more

Local News