Thursday, March 28, 2024

“ரஹ்மான் இசையமைக்கவில்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” – நடிகர் விஜய் போட்ட நிபந்தனை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் படங்களில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர்கள் உட்பட தொழில் நுட்பக் கலைஞர்கள்கூட அவருடைய தேர்வாகத்தான் இருக்கும். ஏன் தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட அனைவரையுமே அவர்தான் தேர்வு செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த ஒரு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் மட்டுமே இந்தப் படத்தில் தான் நடிப்பேன் என்று விஜய் அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நிபந்தனையே போட்டிருக்கிறார்.

அந்தப் படம் விஜய் நடிப்பில் இயக்குநர் பரதனின் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘அழகிய தமிழ் மகன்.’ இந்தப் படத்தைத் தயாரித்தவர் ‘ஸ்வாகசித்ரா’ நிறுவனத்தின் அப்பச்சன். இவரிடம்தான் இந்த நிபந்தனையை விதித்திருக்கிறார் நடிகர் விஜய்.

இது பற்றி சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் தயாரிப்பாளர் அப்பச்சன், “விஜய்யிடம் நான் கால்ஷீட் கேட்டபோது “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்…” என்றார் விஜய்.

நான் ரஹ்மானை கிடார் பிளேயராக கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பல முறை பார்த்திருக்கிறேன். அந்த ரஹ்மானை இப்போது மிகப் பெரிய இசையமைப்பாளராக உருவெடுத்திருந்தார்.

அப்போது ரஹ்மான் இந்திப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்துக் கொண்டிருந்தார். தமிழ்ப் படங்களுக்கு மறுப்பு சொல்லிக் கொண்டேயிருந்தார். இந்த நேரத்தில்தான் விஜய்யின் நிபந்தனையால் நான் ரஹ்மானை சந்திக்கச் சென்றேன்.இந்தப் படம் பற்றி நான் சொன்னவுடன் அதிர்ஷ்டவசமாக ரஹ்மான் இதற்கு ஒத்துக் கொண்டார். “இப்போ நான் ஹிந்தி படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறேன். தமிழில் எவ்வளவு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..” என்றார். நான் “ஒன்றே முக்கால் கோடி தருகிறேன்…” என்றேன். “ஓகே” என்று சொன்ன ரஹ்மான் “நாளை காலை எனக்கு 25 லட்சம் ரூபாயை பணமாகத் தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே நானும் ரஹ்மானிடம் பணத்தைக் கொடுத்தேன்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் அப்பச்சன்.

- Advertisement -

Read more

Local News