Friday, April 12, 2024

மதுரை அன்புவின் ‘கோபுரம் சினிமாஸ்’ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியன் மதுரையில் ‘கோபுரம் சினிமாஸ்’ என்ற பெயரில் மூன்று திரையரங்குகள் கொண்ட பிரம்மாண்டமான மல்டிபிளக்ஸ் தியேட்டரை உருவாக்கியுள்ளார்.

மதுரையின் மத்திய பகுதியில் உள்ள செல்லூர் பகுதியில் சரஸ்வதி’ என்ற தியேட்டர் நெடுங்காலமாக இயங்கி வந்தது. இடையில் ஏற்பட்ட தொழில் சறுக்கலினால் அந்தத் தியேட்டர் இயங்காமல் போக வேண்டிய சூழல் வந்தது.

இந்த நேரத்தில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி சினிமா பைனான்சியரான ஜி.என்.அன்புச் செழியன் அந்தத் தியேட்டரை விலைக்கு வாங்கி சுத்தமாக இடித்துத் தள்ளிவிட்டு புத்தம் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டியுள்ளார்.

இந்தத் தியேட்டர் காம்ப்ளக்ஸுக்கு தனது கம்பெனி பெயரான கோபுரம் சினிமாஸ்’ என்றே பெயர் வைத்துள்ளார். இந்தக் காம்ப்ளெக்ஸில் 3 திரையரங்குள் உள்ளன.

இந்தத் திரையரங்குகள் தீபாவளி தினமான நேற்று திறக்கப்பட்டது. அன்புச்செழியனின் மகளான சுஸ்மிதா அன்புசெழியன் இந்தத் தியேட்டரை திறந்து வைத்தார்.

மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் தன்னை இறங்கியுள்ளார் அன்புச்செழியன்.

இதற்கடுத்து சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ‘ராஜ்’ திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

தற்போது ‘கோபுரம் சினிமாஸ்’ நிறுவனத்தைக் கவனித்து வரும் சுஸ்மிதா அன்புசெழியன் வரும் காலங்களில் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார். இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இது பற்றி ‘கோபுரம் சினிமாஸ்’ நிர்வாக உரிமையாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், “மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டி பிளக்ஸிற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது…” என்று கூறியுள்ளார்.

இந்த ‘கோபுரம் சினிமாஸ்’ மல்டிபிளக்ஸின் சிறப்பம்சங்கள் :

அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய்  ‘கோபுரம் சினிமாஸ்’ உருவெடுத்துள்ளது.

அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம் புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின் விளக்குகள் மற்றும் மிகப் பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wall-ஐ மக்களுக்காக படைத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ்’ நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.

மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News