Friday, April 12, 2024

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் காயத்ரி சங்கர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் G.V.பிரகாஷ் குமார் நடிக்கிறார். சீனு ராமசாமியின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள மாமனிதன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த காயத்ரி சங்கர், இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் செவிலியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

M.S.பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்காலிகமாக ‘Production No.2’  என அழைக்கப்படும் இப்படத்தை Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

இத்திரைப்படம் இயக்குநர் சீனு ராமசாமியின் வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்குமாம். கிராமத்து பின்னணியில்,  முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக இந்தப் படம் உருவாகிறது.

படத்தின் நாயகியாக காயத்ரியைத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “படத்தின் நாயகியின் கதாப்பாத்திரம் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. பள்ளி மாணவி, வேலை செய்யும் பெண் மற்றும் ஒரு தாய். இந்த மூன்று நிலைகளிலும் தன் நடிப்பால்  நியாயம் செய்வார் காயத்திரி. அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியராக இப்படத்தில் நடிக்கிறார்.

எனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, இப்படத்திலும் பெண் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் கதையிலும்  அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம்.   25 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தவுள்ளோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News