கொரோனா வைரஸ்க்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு திரை உலக பிரமுகர்கள் பலர் நிதி உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல இயக்குநரான சுசீந்திரன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தொகைக்கான காசோலையை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதியிடம் அவர் வழங்கினார்.
இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவும் எண்ணத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதில் கலந்து கொண்டோர் வழங்கிய கட்டண தொகையான 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம். இதற்காக இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி…” என்று கூறியுள்ளார்.