Friday, April 12, 2024

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விண்டோ பாய்ஸ் என்னும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் R.சோமசுந்தரம் என்னும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சச்சின் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன் நடிப்பில் வெளிவந்த சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பார்வதி மேனனுக்கு ஜோடியாக நடித்தவர்.

G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அபர்நதி இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவர் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை தொடரின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கும்கி’ அஸ்வின் மற்றும் சுருதி பெரியசாமி எனும் அறிமுக நடிகையும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ மற்றும் ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ படங்களின் ஒளிப்பதிவாளரான R.S.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். விஜய் ராஜன் கலை இயக்குநராகவும், M.ரவிக்குமார் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ போன்ற சிறந்த படங்களிலும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எல்லா காலகட்டங்களிலும் ஹாரர், சஸ்பென்ஸ், திரில்லர் வகை திரைப்படங்கள் சரியாக சொல்கிறபட்சத்தில் பெரிதும் வெற்றியடைந்துள்ளன. பீட்ஸா’, ‘ராட்சஸன்’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அப்படியான ஒரு புதிய முயற்சியாக சஸ்பென்ஸ், திரில்லர், திகில் என எல்லாம் கலந்து சற்றும் சுவாரஸ்யம் குறையாதவகையில் உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து பின்னணி கோர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பரபரப்பான திரைக்கதை வித்தியாசமான காட்சியமைப்புகளோடு உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News