இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 5 இயக்குநர்களை வைத்து 5 புதிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்..
இதில் ஒரு படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார். இதையடுத்து ஜோஸப் பிராங்ளின் என்பவர் இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்.
இந்தப் படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரதீப் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். மணி படத் தொகுப்பு செய்கிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது.