பெண்களை தவறான நோக்கத்துடன் அணுகும் சிலர் திரையுலகிலும் இருக்கத்தான் நடந்துதான் செய்கிறார்கள். இது குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பேசி தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா ‘சமீபத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. பெங்களூரிலிருது பேசுவதாக கூறி டீசண்டாக அதுவும் ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நீங்கள் பெங்களூருக்கு வர முடியுமா?’ என கேட்டார்.
“சரி வருகிறேன்” என்றேன்.
“எப்போது வருவீர்கள்” என கேட்டார். ‘நிகழ்ச்சி நடக்கும் அன்று காலை வந்துவிட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன்’ என்றேன்.
“இல்லை நீங்கள் நாளைக்கே வர வேண்டும்” என்றார்.
“எதற்காக நான் நாளைக்கு வரவேண்டும்” என கேட்டேன்.
“இல்லை மேம், ஒரு என்.ஆர்.ஐ நபர், பெரிய பணக்காரர். அவர் கொடுக்கும் இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என சொன்னார்.
நான், “ அதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டேன்” என சொன்னேன்.
“சரி” என போனை வைத்துவிட்டார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அந்த நபர் ‘உங்கள் பி.ஆர்.ஓ, அல்லது மேனேஜர் எண் இருந்தால் கொடுங்கள். நான் அவர்களிடம் பேசுகிறேன்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. ‘உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது. ஆனால், நீங்கள் நினைக்கும் பெண் நான் இல்லை’ என்றேன். உடனே ‘சாரி மேம். இனிமேல் உங்களிடம் இப்படி கேட்க மாட்டேன். நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே பேசுவேன்’ என அந்த நபர் கூறினார்” என தேவிப்பிரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.