Thursday, April 11, 2024

“போராளிகளுக்கு வாழ்த்துகள்!”: சூர்யா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், ” ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, “ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது. இதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News