Friday, April 12, 2024

‘சூ மந்திரக்காளி’ படம் செப்டம்பர் 24-ல் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குரான சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ‘சூ மந்திரகாளி’ செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை, ஒளிப்பதிவு – முகமது பர்ஹான், பாடல்கள் இசை – சதிஷ் ரகுநாதன், பின்னணி இசை – நவிப் முருகன், கலை இயக்கம் – J.K.ஆண்டனி, படத் தொகுப்பு – கோகுல், நடன இயக்கம் – தீனா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை பேசும்போது, “சேலத்தில் பங்காளியூர்’ என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பதுதான் இவர்களது வேலை.

படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர்விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.

ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா..? பங்காளியூர் திருந்தியதா..? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே இந்த ‘சூ மந்திரகாளி’ திரைப்படம்..” என்றார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெயிலர் சினிமா ரசிகர்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

பிரபல இயக்குநரான சற்குணம் தனது வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘சூ மந்திரகாளி.’

- Advertisement -

Read more

Local News