The post “ஒரு படத்திற்கு 77 விருதுகளா?” ‘சஷ்தி’ குறும் பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும் படம், 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது.
இந்த குறும் பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைக்கதை மன்னன் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். மேலும் இந்த குறும் படத்தில் பணியாற்றி பல்வேறு பிரிவுகளில் சர்வதேச விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு அந்த விருதுகளை இயக்குனர் கே.பாக்யராஜ் தன் கைகளால் வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “75 விருதுகள் வாங்கிய ஒரு குறும் படத்திற்கு இவ்வளவு எளிமையாக ஒரு விழா நடப்பது ஆச்சரியமான ஒன்றுதான். சினிமாவிற்காக தான் பார்த்து வந்த வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு சினிமாவின் மீதான ஆர்வத்தால் இயக்குநர் ஜூட் பீட்டர் டேமியான் இதில் நுழைந்துள்ளார்.
சினிமா ஆசை வந்துவிட்டால் அப்படித்தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்கூட இப்படி வங்கியில் பணிபுரிந்து விட்டு சினிமா மீதான ஆர்வத்தால் அதிலிருந்து வெளியேறி வந்து இன்று மிகப் பெரிய அளவில் சாதித்துள்ளார். வெறுமனே படம் இயக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது என அதற்காக ஒரு கோர்ஸ் படிச்சிட்டு வந்து ஜூடு பீட்டர் டேமியன் அதை செய்திருக்கிறார் என்பது இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது.
நான் படம் இயக்கிய காலகட்டங்களில் படம் ரிலீஸாச்சா, மக்கள் கை தட்டினார்களா அது போதும் என இருந்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் எவ்வளவு தெளிவாக இருந்திருந்தால் இத்தனை திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்து இத்தனை விருதுகளை கைப்பற்றி இருப்பார்..? தயவு செய்து எனக்கும் இந்த திரைப்படங்களை அவார்டுக்கு அனுப்புவது பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.. காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கும் வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும்போது அதை பயன்படுத்திக் கொள்வேன்.
இந்த குறும் படத்தை பார்த்தபோது கடைசியாக அந்த சிறுவன் தனது தாய் பற்றி கேட்கும் கேள்வி மட்டும் சற்று நெருடலாக இருந்தது. தாயின் அன்பை சந்தேகப்பட்டாலும் அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றியது. இயக்குநர் ஜூடு பீட்டர் டேமியன் சினிமாவிலும் கால் பதித்து மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார் கே.பாக்யராஜ்.
The post “ஒரு படத்திற்கு 77 விருதுகளா?” ‘சஷ்தி’ குறும் பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>The post சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘தனித்திரு’ குறும் படம்..! appeared first on Touring Talkies.
]]>திரைப்படக் கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய S.K.செந்தில் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.
புறக்கணிப்பின் வலி இளம் வயதில் மிகக் கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரன்டே நனவாகும். மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போகும். அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த துறையினரையும்விட இதில் வெல்பவர்கள் அடையும் அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம்.
அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லவரும் குறும் படம்தான் இந்த ‘தனித்திரு’.
தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் பயின்று, சன் தொலைக்காட்சியில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய S.K.செந்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.
இந்தப் படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார். இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன் திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர் என்பது ‘தனித்திரு’ குறும்படத்தின் தனிச் சிறப்பு.
கிளைமேக்சில் வரும் திருப்புமுனை காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்.
ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் என்ன? செத்தா விட்டோம்? விரும்பிய ஒன்று கைகூடா விட்டால் வாழ்க்கை அதோடு முடிந்துவிடப் போவதில்லை! சற்று மாற்றி யோசித்தால் உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, தற்கொலை எண்ணமே நமக்குள் வேண்டாம் என்றும் சொல்கிறது ‘தனித்திரு’ குறும்படம்.
இந்தப் படத்தின் வெளியீட்டு விழா தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் மற்றும் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.ஆர். அவர்கள் வெளியிட இனிதே நடந்தேறியது.
‘தனித்திரு’ குறும் படத்தை பார்த்த மாணவர்களும் இப்படம் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் S.K.செந்தில் உடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் S.K.செந்தில் விரைவில் வெள்ளித்திரையில் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘தனித்திரு’ குறும் படம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘யாரடி நீ மோகினி’ இயக்குனர் ஜவஹர் மித்ரனின் பாராட்டு | Coffee With Manasu – Touring Talkies appeared first on Touring Talkies.
]]>The post Coffee With Manasu | Heart Touching Tamil Short film appeared first on Touring Talkies.
]]>The post Coffee With Manasu | Tamil Short film | Teaser appeared first on Touring Talkies.
]]>The post இளம் கலைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..? – IFMF 2020 – Grand Launch | Updating Shortly appeared first on Touring Talkies.
]]>