The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.
]]>ஆனால், லைக்கா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கடைசியாக வெளியிட்ட லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை.
இதனால் லைக்கா நிறுவனம் தற்போது தயாரித்து வரும் அனைத்து படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. இந்த நிலைமை எப்போது மாறும் என்ற கவலையில் லைக்கா சுபாஸ்கரன் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்கு லைக்கா சுபாஸ்கரன் மட்டும் வரவில்லை. ஏனெனில், படப்பிடிப்புகள் பாதியில் நிற்கும் நிலையில் அவரைச் சந்தித்தால் தவறுணர்வு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த நிகழ்வை தவிர்த்தார்.
மேலும், சுபாஸ்கரன் தற்போது பெரிய நிகழ்வுகளையெல்லாம் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து வெளியிட்டால், லைக்கா நிறுவனம் பெரும் லாபத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
ஜூன் மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் லைக்காவுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
The post கொடிக்கட்டி பறந்த லைக்காக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்தியன் 2 படத்திற்காக தவமிருக்கும் லைக்கா… appeared first on Touring Talkies.
]]>The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படவுள்ளன.
விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது, அவர் நடித்த 2012ஆம் ஆண்டு வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய 2 படங்களும் விரைவில் ‘மறுவெளியீடு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் ஜெய் & நடிகை பிரக்யா நாக்ரா திடீர் திருமணமா? தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்ட புகைப்படம் வைரல்… appeared first on Touring Talkies.
]]>சற்று புகைப்படத்தை நன்கு கவனித்து பார்த்தோம் என்றால் அவர்கள் அமர்ந்துள்ள கார்க்கு பின்னால் கேமராவோடு படக்குழுவினர் இருப்பதாக தெரிகிறது. அதே சமயம் அவர்கள் பதிவிட்ட அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உள்ள புகைப்படத்தில் புதுவாழ்வு ஆரம்பம் கடவுளின் ஆசீர்வாதோடு என்ற டெக்ஸ்ட் செய்திருப்பது ரசிகர்களிடையே இது உண்மையில் திருமணமா அல்லது மூவி ப்ரோமோஷனா என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post நடிகர் ஜெய் & நடிகை பிரக்யா நாக்ரா திடீர் திருமணமா? தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்ட புகைப்படம் வைரல்… appeared first on Touring Talkies.
]]>The post மிஸ் செய்த சூர்யா டேக் ஓவர் செய்த அருண் விஜய்…. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வணங்கான் போஸ்டர் வெளியீடு.. appeared first on Touring Talkies.
]]>பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். முதலில் இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவர் பின்னர் படத்திலிருந்து விலகினார். பாலா முன்பு துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீவிரமாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து படக்குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
அருண் விஜயுடன் மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post மிஸ் செய்த சூர்யா டேக் ஓவர் செய்த அருண் விஜய்…. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் வணங்கான் போஸ்டர் வெளியீடு.. appeared first on Touring Talkies.
]]>The post வெங்கடேஷ் பட் போட்ட ட்வீட்… அவர் மீதுள்ள பொறாமையில் தான் இப்படி செய்தார் என நெட்டிசன்கள் விவாதம்! appeared first on Touring Talkies.
]]>விஜய் டிவியை விட சன் டிவி அதிக சம்பளம் வழங்குவதால், அவர் விலகிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.அதே சமயம் அவருக்கு பதிலாக தற்போது பேமஸாக உள்ள மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிலையில் குக் வித் கோமாளியில் இணைந்துள்ளார்.
இவர் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பொறாமையில் இவர் விஜய் டிவியுடன் ஏதோ பேசியதால் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.ரசிகர் ஒருவர் நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என்று பதிவிட கமெண்ட்டுக்கு உண்மை ஒரு நாள் வெல்லும் என கமெண்ட் செய்துள்ளார் வெங்கடேஷ் பட்.
ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும் வெங்கடேஷ் பட் திடீரென விஜய் டிவியின் போட்டி சேனலான சன் டிவிக்கு மாறியது நெகட்டிவாக தான் கருதப்படுகிறது.
The post வெங்கடேஷ் பட் போட்ட ட்வீட்… அவர் மீதுள்ள பொறாமையில் தான் இப்படி செய்தார் என நெட்டிசன்கள் விவாதம்! appeared first on Touring Talkies.
]]>The post கதையே கேட்காமா இந்த படத்துல கமிட்டானேன்… கவர்ச்சி உடையில் வந்து கவர்ந்த ராஷி கண்ணா – அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>ராஷி கண்ணா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு போன்றோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே 3 அன்று வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு தொடர்ந்து பிரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக பிரமோஷன் நடத்தப்பட்டது.
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தமன்னா ஹோம்லியாக சேலை அணிந்து கலந்துகொண்டார். ஆனால், ராஷி கண்ணா கவர்ச்சியான உடையில் வந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார். அவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராஷி, அரண்மனை 4 படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதனால் கதை பற்றி எதுவும் கேட்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், இந்தப் படம் சிறப்பான கொண்டாட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post கதையே கேட்காமா இந்த படத்துல கமிட்டானேன்… கவர்ச்சி உடையில் வந்து கவர்ந்த ராஷி கண்ணா – அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.
]]>நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க, அமைச்சர் உதயநிதி நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார். அடுத்து, சங்கத்தின் நலச்செயல் அமைப்பின் உறுப்பினரான கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதேபோல, விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடையும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக நடிகர் சங்கம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கையில், 2000-2006 காலப்பகுதியில் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய நெப்போலியன் சங்கக் கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்புநிதி வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
The post கமல், விஜய், சிவாவை தொடர்ந்து நெப்போலியன் கொடுத்த நன்கொடை! வேகமெடுக்கும் நடிகர் சங்க கட்டிட பணிகள்…. appeared first on Touring Talkies.
]]>The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.
வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.
அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.
அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post தலையை உடைத்த சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை தரப்பு… போலீசில் புகார்… appeared first on Touring Talkies.
]]>நடிகர்கள் முரளி, வடிவேலு, வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடித்த சுந்தரா டிராவல்ஸ் எனும் நகைச்சுவைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராதா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த பின்னர், ராதா திருமணம் செய்து வாழ்க்கையில் இருந்து விலகினார். ஆனால், திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால், தற்போது தனியாகவே வாழ்க்கை நடத்தி வருகிறார்.
பிட் காயினில் முதலீடு செய்வது தொடர்பாக துவாரகேஷிஸ் நடிகை ராதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராதா 90,000 ரூபாய் பிட்காயினில் முதலீடு செய்ததாகவும், ஆனால் இதுவரை அசல் மற்றும் லாபத் தொகையை துவாரகேஷிஸ் திருப்பி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனால், நடிகை ராதா துவாரகேஷிசை அறிமுகப்படுத்திய முரளிகிருஷ்ணனிடம் பணத்தைக் கேட்டார். நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் முரளிகிருஷ்ணனிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, முரளிகிருஷ்ணனை ராதாவின் தரப்பினர் தாக்கியதாகத் தெரிகிறது. தலையில் காயம் ஏற்பட்ட முரளிகிருஷ்ணன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் நடிகை ராதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post தலையை உடைத்த சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை தரப்பு… போலீசில் புகார்… appeared first on Touring Talkies.
]]>The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.
]]>இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பெரிய தொகைக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றிருப்பது பெரிய விஷயம் அல்ல என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.
]]>