மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். தனது இசையால் உலக ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
அவர் ஒரு பேட்டியில் தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருது காணாமல் போய் விட்டது என்றும் பிறகு நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைத்தததாகவும் கூறியிருந்தார்.
|விருது கிடைத்ததும் எனது அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.அதை அவர் துணியில் சுற்றி அலமாரியில் வைத்து விட்டார். பின் அதைப்பற்றி பல ஆண்டுகளாக நான் யோசிக்க வில்லை. எனது அம்மா கரீமா பேகம் 2020 காலமானார்.
பிறகு தேடியபோதுஅலமாரியில் விருதுகள் இல்லை.
நான் தொலைத்து விட்டேன் என்றே நினைத்தேன். அதன் பிறகு எனது மகன் வேறு அலமாரியில் தேடிய போது கிடைத்தது அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது| என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார்.