ஏ.ஆர் ரகுமான் பற்றியும் அவரது இசை பற்றியும் இயக்குனர் பார்த்திபன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தில் படத்தில் கெட்ட வார்த்தை இருக்க கூடாது என்பது இசையமைப்பாளரின் கண்டிஷன்.
ஆனால் அதையும் மீறி அதில் கெட்ட வார்த்தை வருகிறது. அந்த கதைக்கு தேவை என்பதால் அதை வைத்துள்ளனர். ஆனால் அதை விரும்பாவிட்டாலும் வார்த்தையின் வலியை தனது இசையில் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரஹ்மான் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.