Saturday, April 13, 2024

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கங்கள் அமைக்கின்ற வேலைகள் கடந்த 10 தினங்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதியில் ரஜினிகாந்த் அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.  ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலைக்கு ‘அண்ணாத்த’ படக் குழு இப்போது தள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 200 பேர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், இப்போது அரசு விதித்துள்ள விதிகளின்படி அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே படப்பிடிப்பிலேயே பங்கு பெற முடியும்.

இந்தக் காரணத்தினால்தான் ‘அண்ணாத்த’  திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. குறைந்தபட்சம் 200 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி தந்ததற்கு பின்புதான் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குமாம்.

- Advertisement -

Read more

Local News