Friday, April 12, 2024

‘இடி முழக்கம்’ படத்தில் பாடல் பாடியிருக்கும் மலையாள நடிகர் வினீத் சீனிவாசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேசிய விருது பெற்ற இயக்குநரான சீனு ராமசாமி இயக்கி வரும் இடி முழக்கம்’ படத்தில் ஒரு பாடலை பிரபல மலையாள நடிகரும், இயக்குருமான வினீத் சீனிவாசன் பாடியுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் G.V.பிரகாஷ் குமார் நடிக்கிறார். காயத்ரி சங்கர், நாயகியாக நடிக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், M.S.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

இந்த இடி முழக்கம்’ திரைப்படத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய

“பூ மலரும் காலம் எது

யார் அறிவார்

அன்பூ மலரும் இதயம்

எது யார் அறிவார்”

என்ற பாடலை பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

இது பற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறுகையில் “இசையமைப்பாளர் ரகுநந்தன் தந்த டியுனுக்கு “வினித் பாடினால் நன்றாக இருக்கும்” என்றேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

ஒரு கலைஞனாக வினித் ஸ்ரீனிவாசன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் நான். அவரை நினைத்தாலே என் மனம் இனம் புரியாத சந்தோசம் கொள்ளும். இடி முழக்கம்’ படத்தில் பாடுவதற்கு வினித் ஸ்ரீனிவாசனை அணுகினேன். அவரும் என் மீது அன்பு கொண்டிருக்கிறார். என் படங்களின் வழியாக என்னை நன்கு அறிந்திருக்கிறார் என்பதை தெரிந்து நெகிழ்ந்தேன்.

நான் கேட்டதும் உடனே வந்து இந்தப் பாடலை பாடிக் கொடுத்தார். வினித் ஸ்ரீனிவாசன் பாடிய இந்த மெலடி அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும்…” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.

- Advertisement -

Read more

Local News