இயக்குனர் கே.செல்வ பாரதி வசனம் எழுத சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெற்றி பெற்ற படம், உள்ளத்தை அள்ளித்தா. இதில் முதலில் நடிக்க இருந்தவர் விஜய்!
இது குறித்து செல்வபாரதி கூறும்போது, “முதலில் இந்த படத்தினை விஜயை வைத்து எடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார். உள்ளத்தை அள்ளித்தா தயாரிப்பாளர்களுக்கோ படத்தினை பொங்கலில் வெளியிட வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ சில மாதங்கள் கழித்து, வெளியிடுங்களேன் என்றார். ஆனால் ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம் இருந்த தயாரிப்பாளர், தான் குறிப்பிட்ட தேதியிலேயே வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதை தொடர்ந்துதான் கார்த்தி அந்தப் படத்தில் நடிப்பது முடிவானது..” என்றார் செல்வபாரதி
.