Friday, April 12, 2024

நடிகர் சூர்யாவின் அடுத்தப் பட டைட்டில் ‘எதற்கும் துணிந்தவன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படம் சூர்யா நடிக்கும் 40-வது திரைப்படமாகும். இந்தப் படத்தின் முதல் போஸ்டர் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர்கள் சத்யராஜூம், சூரியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி ரூபன் படத் தொகுப்பு செய்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

இதுவரையிலும் பாண்டிராஜ் குடும்பக் கதைகளை மட்டுமே படமாக்கியிருக்கிறார். ஆனால், இப்போது அந்த வட்டத்தைவிட்டு வெளியில் வந்து கமர்ஷியல் கலந்த திரில்லர் படமாக இதனை உருவாக்கியிருக்கிறாராம். படத்தின் முதல் கட்ட போஸ்டர் வீடியோவில் இதுதான் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News