Thursday, April 11, 2024

நடுராத்திரி சிம்பு செஞ்ச வேலை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘பத்து தல’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி(இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டது.  ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தனது பிறந்தநாளின் நள்ளிரவு இப்படி அதிரடியாக பாடலை வெளியிட வேண்டும் என்று சொன்னவர் சிம்புதானாம்.

இதனால், ‘நள்ளிரவில் சிம்பு செய்த அதிரடியைப் பாருங்க’ என அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News