Thursday, April 11, 2024

நடிகையின் நிறைவேறாத காதல்!  அவர்  விருப்பத்தை நிறைவேற்றிய கமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசனின் காதல்கள் அத்தனையுமே எந்த ஒளிவு மறைவும் இன்றி சினிமா உலகத்துக்கு தெரிந்த ஒன்றுதான். வாணி கணபதி, சரிகா, கௌதமி என உறுதிப்படுத்தப்பட்ட உறவுகளும் இவருக்கு உண்டு. அதேபோல்  வேறு சில நடிகைகளுடன் என கிசுகிசுக்கள் வந்ததும் உண்டு.

இதில் எந்த வகையிலுமே சேராத ஒரு நடிகையும் இருக்கிறார்.

சொல்லத்தான் நினைக்கிறேன் என்னும் திரைப்படத்தின் கமலுடன் இணைந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. அதன் பின்னர் அபூர்வராகங்கள், உணர்ச்சிகள் என்று ஒரு சில படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள்   வெளியாகின. பின் 1978 இல் கமலஹாசன், வாணியை மணந்த பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.

ஸ்ரீ வித்யா மலையாள தயாரிப்பாளர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்று விட்டார். பின்னர் அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா போன்ற படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த அவர் பின்பு கேரளாவுக்கே திரும்பி விட்டார். அந்த நேரத்தில் தான் ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் யாரையுமே பார்க்க விருப்பமில்லை என்று தனிமையில் இருந்தார்.

ஆனால் இறக்கும் தருவாயில்   கமலஹாசனை பார்க்க வேண்டும் என்று இவர் சொல்லி இருக்கிறார். கமலஹாசனும், ஸ்ரீவித்யாவை நேரில் சென்று பார்த்து இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடி இருக்கிறார். ஸ்ரீவித்யா இறந்த பிறகு கமலஹாசன் அவருக்கான எழுதிய இரங்கல் மடலில் இறந்தும் இறவா தோழி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கமலஹாசன் சினிமாவுக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆன கொண்டாட்ட விழாவில் தன் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் என்று அவர் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார். அதில் ஸ்ரீவித்யாவின் பெயர் முதலிலேயே இடம் பெற்றிருந்தது. எப்படி இருக்க கமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் ஸ்ரீவித்யாவை காதலித்ததாக எப்போதுமே சொல்லியதில்லை.

- Advertisement -

Read more

Local News