அம்மா வேடம் என்றாலே, சரண்யா, சுஜாதா இருவர்தான் என்று ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் சுஜாதா. தனக்கு திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டு உள்ளார்:
“நடிக்கும் ஆர்வம் இருந்தது. ஆனாலும் தயக்கம்… இந்த நிலையில் விருமாண்டி படத்தில் அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க நடிகையை தேர்வு செய்கிறார்கள் என்பதை அறிந்தேன். ஆடிசனுக்கு போனேன். பலரும் வந்திருந்தார்கள். இறுதியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிறகுதான் தெரிந்தது.. படத்தின் நாயகி அபிராமிய போலவே எனக்கும் முகச்சாயல் இருந்ததால் தேர்வு செய்தார்களாம். ஆக, அபிராமியால் முதல் வாய்ப்பு கிடைத்தது” என்றார் சுஜாதா.