Thursday, April 11, 2024

போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிய சமுத்திரகனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, ஒரு நாள் இரவு காவல் நிலையத்தில் தூங்க வேண்டிய நிலமை வந்தது என்றால் நம்ப முடிகிறதா?

அந்த சம்பவத்தை அவரே சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.

“ சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு சின்ன வயதில் சென்னை வந்தேன். அதுவும் அப்பாவின் பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை திருடிக்கொண்டு!  எங்கு செல்வது என தெரியாமல் ஜெமினி பாலத்தின் கீழே படுத்து தூங்கினேன்.

அப்போது அங்கு ஒரு போலீஸ் அதிகாரி வந்து ‘இங்கெல்லாம் படுக்கக்கூடாது’ என்று சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, செய்திதாளை விரித்து கொடுத்து என்னை தூங்க சொன்னார். மறுநாள் காலை டீ வாங்கி கொடுத்தார். நான் என் சினிமா ஆசையை கூற ‘இப்போது நீ சிறு பையன். சினிமாவிலெல்லாம் சேர முடியாது.. ஊருக்கு போ’ என்றார். நானோ ‘தி. நகருக்கு செல்ல வழி மட்டும் சொல்லுங்கள்’ என்றேன். கொஞ்ச நேரம் என்னைப் பார்த்தவர், வழிசொல்லி என்னை அனுப்பி வைத்தார். அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். நான் இயக்குனராக வெற்றி பெற்ற பின் அவரை சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை’ என சமுத்திரக்கனி அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

Read more

Local News